நாடளாவிய ரீதியில் நேற்று (06) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் மொத்தம் 719 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 28,476 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 13 நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும் பிடியாணை நிலுவையில் உள்ள 409 சந்தேக நபர்கள் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறிக்கையின்படி, மொத்தம் 19 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 20 பேர் பெறுப்பற்ற ரீதியில் வாகனம் செலுத்தியதாக கண்டறியப்பட்டனர்.
பல்வேறு போக்குவரத்து குற்றங்களை மீறிய 3,483 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களைக் கைது செய்ய நாடு முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.