பொதுவாக நம் உடலுக்கும் குடலுக்கும் நன்மை செய்ய நம் முன்னோர்கள் பல மூலிகைகளை கொண்டு சட்னி துவையல் செய்து சாப்பிட சொன்னார்கள் . அவர்களும் அந்த சட்னியை சாப்பிட்டு ஆரோக்கியமாய் வாழந்து வந்தனர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாஸ்ட் ஃபுட் அது இது என பலவற்றை காலம் நேரம் பார்க்காமல் வயிற்றுள் தள்ளிவிடுகின்றோம். அதனால் பல துன்பங்களையும் அனுபவிக்கின்றோம்.
பெரியவர்கள் முதல் இளையோர்கள்வரை கொலஸ்ட்ரால் முதல் பல நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
நம் மூதாதையர்கள் சொல்லிவைத்த புதினா சட்னி ,பிரண்டை சட்னி ,பூண்டு சட்னி ,வெங்காய சட்னி ,தக்காளி சட்னி ,மற்றும் கருவேப்பிலை சட்னி ,கொத்தமல்லி சட்னி ,போன்ற சட்னிகள் .
இவைகளை நாம் தொட்டுக்கொண்டு சோறு ,இட்லி தோசை சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியமாய் இருக்கும் .
சட்னி செய்யும் முறை;-
இந்த சட்னிக்கு முதலில் 20 கிராம் பூண்டு, 20 கிராம் புதினா, 10 மில்லி எலுமிச்சை சாறு, 50 கிராம் கொத்தமல்லி (கொத்தமல்லி), 1 பச்சை மிளகாய், சிறிது உப்பு, 15 கிராம் ஆளி விதை எண்ணெயை ஒரு மிகசியில் போட்டு அரைத்து கொள்ளவும் .
இப்போது மிக்சி மூடியை திறந்து பார்த்தால் உங்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் இயற்கையான கொத்தமல்லி சட்னி ரெடி.
நன்மைகள்
1.இந்த சட்னியில் உள்ள கொத்தமல்லியின் பச்சை இலைகள் மற்றும் புதினாவில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் குளோரோபில் உள்ளன.
2.இந்த குளோரோபில் உடலின் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
3.இந்த சட்னியில் உள்ள ஏராளமான புரதம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நம் உடலை காக்கிறது
4.இந்த சட்னியில் உள்ள மூலிகைகள் நமக்கு இதய நோய் அபாயத்தை தானாகவே குறைக்கிறது.
5. இந்த ஆரோக்கியம் உள்ள கொத்தமல்லி சட்னியை தொடர்ந்து உட்கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.