கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7600 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் எலபடகமவைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.