இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்காக மீனவர்கள் பயன்படுத்திய 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.