நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, இந்திய அரசு 1 பில்லியன் அமெரிக்க டொலரை ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா மூலம் மார்ச் 17, 2022 அன்று இலங்கை அரசுக்கு சலுகைக் கடனாக வழங்கியது.
அதன் கீழ் அரிசி, செத்தல் மிளகாய் போன்ற உணவுப் பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் முன்னுரிமைகளின் அடிப்படையில் சீனி, பால் மா, கோதுமை, மருந்துகள், எரிபொருள் மற்றும் தொழில்துறை மூலப்பொருட்களை வழங்குவதற்கான வேறு பல ஒப்பந்தங்கள் இந்தக் கடன் வசதியின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

