தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் தனது முடிவினை அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பான அறிவித்தலை சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவுக்கு கோட்டாபய அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, தனது பதவி விலகல் கடிதத்தை இன்றைய தினத்திற்குள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அந்த கடிதத்தை பெற்றுக்கொள்ளும் முறைமை மற்றும் அதன் சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Share.

Leave A Reply

Don`t copy text!