இரண்டரை கோடி ரூபா..
வர்த்தகர் ஒருவர் ஏழை மக்களுக்கு தனது சொந்த பணத்தை உதவித் தொகையாக அன்பளிப்பு செய்ய முன்வந்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையால் அன்றாடம் உழைத்து உண்ணும் மக்கள் மற்றும்,
குறைந்த வருமானம் கொண்டவர்கள் என பலர் அதிக சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். இ்ந்த நிலையிலேயே குறித்த வர்த்தகர் தனது சொந்த பணத்தை மக்களுக்கு தானமாக வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்ற வர்த்தகரே தனது சொந்த நிதியில் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை மக்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்.
ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் அவர் வழங்குகிறார். அவரிடம் பண உதவி பெற மக்கள் கூட்டம் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டரை கோடி ரூபா.. ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் அவர் வழங்குகிறார். அவரிடம் பண உதவி பெற மக்கள் கூட்டம் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No Comments1 Min Read

