இனஅழிப்பு, வலிந்து காணமால் ஆக்கப்பட்டமை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாளான நாளைய தினம் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் கடந்த 25ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் நாளை வரை நடைபெறவுள்ளது.
இன்றைய போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர்அதிகளவில் கலந்து கொண்டிருந்ததுடன் விசாரணையை வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.