மட்டக்களப்பில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடாத்தியத்தில் கருணா கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (03-11-2024) ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டுதலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் பாடசாலை வீதியில் ஜனநாயக முன்னணி கட்சியான கருணா அம்மானின் கட்சியின் வேட்பாளரின் காரியாலயத்தின் முன்னாள் உள்ள வீதியில் நேற்றிரவு ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
இந்தநிலையில் அந்த பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் அங்குள்ள மதில்களில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளுக்கு மேல் பிள்ளையானின் கட்சி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
தாக்குதலின் போது கருணாவின் கட்சி வேட்பாளர் முனிசாமி நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர் இருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதையடுத்து படுகாயமடைந்தவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.