இலங்கையின் கடந்த அரசாங்கத்தில் உயர்மட்ட அமைச்சர் பதவியை வகித்த அரசியல்வாதி ஒருவர் விரைவில் பொலிஸாரால் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த அமைச்சர் , சர்ச்சைக்குரிய பணப் பரிவர்த்தனை தொடர்பாகவும், நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் திரும்பப் பெறப்பட்ட வழக்கு தொடர்பாகவும் இக் கைதுநடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது அவசரமாக நடைபெற்று வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

