வவுனியா குடியிருப்பு இருக்கும் சிறுவர் பூங்காவில் மதுபோதையில் நுழைந்த மூன்று ரவுடிகள் பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை மாலை (22-02-2022) இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, முச்சக்கர வண்டி ஒன்றில் சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்த அந்த குழுவினர் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

மேலும், இதனை அவதானித்த நபர் ஒருவர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரையும் தாக்கி காயப்படுத்தியதுடன், அவரது பெறுமதிக்க தொலைபேசியையும் உடைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அவசர பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த போதும் நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு சமூகமளிக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்

Share.

Leave A Reply

Don`t copy text!