1495 ஆம் ஆண்டில் லியோனார்டோ டா வின்சி வரைந்த மிலனின் இடைக்கால ஸ்ஃபோர்ஸா கோட்டைக்கு அடியில் ஒரு மறைக்கப்பட்ட சுரங்கப்பாதை கட்டமைப்பு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2021 மற்றும் 2023 க்கு இடையில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது நவீன நகரங்களுடனான வரலாற்றின் ஆழமான தொடர்பை நினைவூட்டுவதுடன், 1300 களின் நடுப்பகுதியில் முதலில் கட்டப்பட்ட ஸ்ஃபோர்ஸா கோட்டை 1495 ஆம் ஆண்டில் மிலன் பிரபு டா வின்சியை அதன் உட்புறங்களை அலங்கரிக்க நியமித்தபோது பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டது.
இந்த காலகட்டத்தில், கோட்டையின் கட்டமைப்பை ஒத்த தற்காப்பு கோட்டைகளையும் அவர் வரைந்தார்.
கோட்டை கட்டுமானத்தில் டா வின்சியின் நேரடி ஈடுபாட்டின் அளவு நிச்சயமற்றதாக இருந்தாலும், ராணுவ கட்டிடக்கலையில் அவரது நிபுணத்துவம் இதன் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதைகள் மட்டுமல்லாது, பீப்பாய்-வால்ட் கூரைகளைக் கொண்ட பிற செங்கல் கட்டமைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

