வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுவன் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
உறவினரின் வீட்டுக்கு வீதியால் நடந்து சென்ற சிறுவனைப் பின்னால் வந்த கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மேற்படி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
காரின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.