ஆடைத் தொழிற்துறையில், இந்த ஆண்டில், 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதற்கான இலக்கை எட்டக்கூடியதாக இருக்கும் என ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார தளம்பல் நிலை காணப்படுகின்ற போதிலும், ஆடைத் தொழிற்துறை வலுவான நிலையில் உள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், ஆடைத் தொழிற்துறையின் வருமானம், 1.5 பில்லியன் டொலர் வரையில் அதிகரித்து,10.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மேலும் அந்த வளர்ச்சி வீதத்தில், மார்ச் மாதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும், ஏப்ரலில் 445.79 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share.

Leave A Reply

Don`t copy text!